--> -->

குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர்

ஜூலை 31, 2021

200 குளங்களை புனரமைப்பு செய்யும், ஜனாதிபதியின் "வாரி செளபாக்ய" திட்டத்தின் கீழ் வெலிஓயா, மகாவலி-எல் வலயத்தில் அமைந்துள்ள 4 குளங்களை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

புணரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ இயந்திரங்களுக்கான எரிபொருள் செலவுக்காக மகாவலி அதிகாரசபை, சுமார் 3.4 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கமைய, தற்போது சஹன வெவ, ஹன்ஸ விள, கம்பிலி வெவ மற்றும் வெஹெர வெவ ஆகிய குளங்களை புனரமைக்கும் பணிகளை 11வது கள பொறியாளர் படைப்பிரிவு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும், இந்த திட்டத்தின் மூலம் 300 க்கும் அதிகமான குடும்பங்கள் நன்மை அடையவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.