--> -->

சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கமும் கோபுரத்தின் மூன்றாம் நாள் பவனி ஆரம்பம்

ஆகஸ்ட் 10, 2021

பெல்லன்வில ராஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடா மாணிக்கம் மற்றும் கோபுரம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்தது.

மேலும், இந்த புனித வஸ்துக்கள் இன்றைய தினம்  (ஓகஸ்ட், 10) இந்த வாகன பவனி கொரதோட்ட ரஜமஹா விஹாரயை நோக்கி பயணிக்கவுள்ளது.

இதற்கமைய, இன்றைய  பவனியில், போகந்தர, பிலியந்தலை, பொல்கஸோவிட்ட, கொட்டாவ, மஹரகம, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், எகொடவத்த, ரத்தனபிட்டிய, திவுல்பிட்டிய வடக்கு, நுகேகொட, நுகேகொட புகையிரத நிலையம், நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய, அகுரேகொட, அரங்கல, பொரலுகொட, அதுருகிரிய, கடுவெல வீதி மற்றும் ஒருவெல ஊடாக  பயணித்து  கொரதோட்ட ரஜமஹா விஹாரயை சென்றடையவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் அடங்கிய இந்த வாகன பவனி வணக்கத்துக்குரிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும்  இடம்பெறுகின்றன.

நாடளாவிய ரீதியில் திட்டமிடப்பட்டுள்ள வீதிகளில் வலம் வரவுள்ள இந்த வாகன பவனியின்போது போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிரு சேய தூபியின்  ‘சூடா மாணிக்கம்’ மற்றும் 'கோபுரம் ' என்பவற்றை  ஏந்திய வாகன பவனி பெளத்த  சமய சம்பிரதாயங்களுடன் சுபவேளையில் நாடு தழுவிய தனது பயணத்தை ஓகஸ்ட் ,08ம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.