--> -->

சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் கொரதோட்ட ரஜமஹா விஹாரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது

ஆகஸ்ட் 11, 2021

கொரதோட்ட ரஜ மஹா விஹாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி இன்று காலை (ஆகஸ்ட், 11) விஹாரையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இதற்கமைய குறித்த வாகன பவனி, கடுவெல, புதிய கண்டி வீதி, விஹாரை மாவத்தை, கடுவெல, அங்கோட, கொதடுவ புதிய நகரம், கொடிகாவத்த, மெகொட கொலன்னாவ, ஒருகொடவத்த, சேதவத்த, பேலியகொட சந்தி, பியகம வீதி வழியாக இன்று மாலை களனி ரஜமஹா விஹாரையை சென்றடைந்தது,

புனித வஸ்த்துக்கள் அடங்கிய இந்த வாகன பவனி வண. மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.

நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள வீதிகளில் வலம் வரவுள்ள இந்த வாகன பவனியின்போது போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.