--> -->

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்கள் வாரியபொல நோக்கி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 16, 2021

சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை  ஏந்திய வாகன பவனி இன்று காலை   (ஓகஸ்ட், 16) நா உயண ஆரண்யவிலிருந்து வாரியபொல ஸ்ரீ விஷுத்தாராம விஹாரையை நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்தது.

இதற்கமைய, நா உயன ஆரண்யவையில்  வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட இந்த புனித பொருட்களை ஏந்திய வாகன பவனி  ரம்பே, கும்புகெத்த, ஹிரிபிட்டிய, கனேவத்த மற்றும் வெல்லகல பிரதேசங்களைக் கடந்து வாரியபொல ஸ்ரீ விஷுத்தாராம விஹாரையை சென்றடையவுள்ளது.

வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி இடம்பெறுகின்றன.

மேலும், இந்த வாகன பவனியின் போக்குவரத்தினை கையாளும் நடவடிக்கை அந்ததந்த பிரதேசத்திற்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு இந்த வாகன பவனியின்போது கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.