--> -->

ரூ.6 மில்லியன் பெறுமதியான உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 17, 2021

மதவாச்சி-மன்னார் வீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடியில் 1000 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

பொலெரோ ரக கெப் வண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளே கடமையில் ஈடுபட்டிருந்த 54வது பிரிவின் 15வது கெமுனுவோச் படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் இந்த உளர்ந்த மஞ்சளின் சந்தைப் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் அதனைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தபட்ட வாகனம் சகிதம் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.