--> -->

புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமிப்பு

ஆகஸ்ட் 18, 2021

ரியர் அட்மிரல் வைஎன் ஜயரத்ன இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 2021 ஆகஸ்ட்,  17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தின்போது ரியர் அட்மிரல் ஜயரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.