--> -->

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்த்துக்கள் இன்று அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையும்

ஆகஸ்ட் 18, 2021

சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி இன்று (ஓகஸ்ட், 18) மாலை அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.

இதற்கமைய, வட்டாரம ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விஹாரையை வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் என்பவற்றை ஏந்திய வாகன பவனி தேவாலகம, ரன்வல , கலிகமுவ, கொட்டியாக்கும்புர, ருவன்வெல்ல, மீவிட்டிகம்மன, ஊராப்பொல ஆகிய பிரதேசங்களை கடந்து இன்று மாலை அத்தனகல்ல ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.

புனித வஸ்த்துக்கள் ஏந்திய இந்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.

இந்த வாகண பவனியின்போது கடுமையான சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.