--> -->

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய நீர் மட்ட அளவினை சீர்செய்ய மணல் மூட்டை நீர்வழி அமைப்பு

செப்டம்பர் 19, 2021

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் மட்டம் குறைந்ததையடுத்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, மகாவலி ஆற்றிலிருந்து கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வசதி செய்வதற்காக இராணுவத்தினரால் கந்தளாய் நீர்வழியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22வது பிரிவின் கீழ் உள்ள படைவீரர்களினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 15,000 க்கும் மேற்பட்ட நீர் பாவனையாளர்கள் பயனடையவுள்ள அதேவேளை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தடையின்றி தொடர்ந்து வழங்குவதற்கு வழிகோலியுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.