--> -->

காயமடைந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

செப்டம்பர் 20, 2021

பல நாள் மீன்பிடிக்கு கடலுக்கு சென்றிருந்தத படகில் பலத்த காயமடைந்த இரண்டு மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையின் உதவியுடன் கடற்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு கரைக்கு கொண்டுவரப்பட்ட காயமடைந்த மீனவர்கள் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த படகு காலியில் இருந்து 120 கடல் மைல் (222 கிமீ) தொலைவில் உள்ள தென் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.