--> -->

இராணுவத்தினருக்கு சேதன பசளை உற்பத்தி குறித்த விழிப்புணர்வு திட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 21, 2021

வெலிஓயா பிரதேசத்தில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இராணுவத்தினரால், மகாவலி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, 62வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் வழிகாட்டுதலின் கீழ் சேதன பசளை உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படையினரை பயிற்றுவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது மகாவலி ‘எல்’ வலய விவசாய மற்றும் விவசாய உற்பத்தி தொடர்பான பிரதி வதிவிட திட்ட முகாமையாளரினால் சேதன பசளை உற்பத்தி தொடர்பாக இராணுவத்தினருக்கு விரிவுரைகள் வழங்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.