--> -->

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது

செப்டம்பர் 25, 2021

வேட்டைகாடு பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2350 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 50 கிலோகிராம் ஏலக்காய் என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

முல்லைத்தீவில் உள்ள 24வது விஜயபாகு காலாட்படை படைப்பிரிவிரிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அளித்த இரகசிய தகவலுக்கமைய இந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் சகிதம் சந்தேக நபர்கள் இருவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பூனேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.