--> -->

வழிபாடுகளுக்காக சந்தஹிருசேய புனித வஸ்த்துக்களை ஏந்திய வாகன பவனி

ஒக்டோபர் 04, 2021

சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசத்தை ஏந்திய வாகன பவனி நாளை (ஒக்டோபர், 05) கதிர்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன கிரி வெஹெரவை சென்றடையவுள்ளது.

வெஹெரஹேன ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற சமய கிரிகைகளின் பின்னர் ஆரம்பமான சந்தஹிருசேய தூபியின் புனித வஸ்துக்களை ஏந்திய வாகன பவனி, தேவேந்திர முனை, கந்தர, திக்வெல்ல, தங்கல்ல, ரண்ண, ஹுங்கம, ஹம்பாந்தோட்டை மற்றும் வீரவில ஆகிய பிரதேசங்களை கடந்து இன்று (ஒக்டோபர், 04) மாலை திஸ்ஸமஹாராம ரஜமஹா விஹாரையை சென்றடையவுள்ளது.

சென்ற மாதம் அமுல்படுத்தப்பட்ட நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகண பவனி, இம்மாதம் 1ம் திகதி முதல் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இந்த புனித வஸ்த்துக்கள் ஏந்திய வாகண பவனி நாட்டின் பல பகுதிகளை கடந்து இம்மாத இறுதியில் அனுராதபுரத்தில் உள்ள சந்தஹிருசேய தூபி வளாகத்தை சென்றடையவுள்ளது.

குறித்த வாகன பவனி வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரின் பெளத்த சமய அனுஸாசனத்துடனும் வழிகாட்டுதல்களுடனும் இடம்பெறுகின்றன.

கடுமையான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி இடம்பெறும் இந்த வாகன பவானியின் போதான போக்குவரத்து நடவடிக்கைகள், அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான போக்குவரத்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.