--> -->

கிழக்கு பிராந்தியத்தில் இராணுவத்தினரால் மருத மரக்கன்றுகள் நடுகை

ஒக்டோபர் 20, 2021

கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் கிழக்கு தலைமையக வளாகத்தில் பிரதேசத்தின் நீரேந்து பிரதேசங்களின் நீரேந்து திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு 1,600 மருத மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.

கிழக்கு பிராந்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு விழாவை யொட்டி நாடளாவிய ரீதியில் 10,000 மருத மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டத்கு இணங்க இந்த திட்டம் மேட்கொள்ளப்படுகின்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.