--> -->

உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விமானப்படை ஜூடோ வீரர்கள் பயணம்

ஒக்டோபர் 25, 2021

இந்த மாதம் பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 40 வது உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை சர்வதேச ஜூடோ நடுவரான சார்ஜன்ட் நுவான் அத்தநாயக்க மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட பத்து ஜூடோ வீரர்கள் இம்மாதம் 27ம் திகதி பயணமாகவுள்ளனர்.

புறப்பட்டுச் செல்ல உள்ள அணியின் தலைவரான கோப்ரல் சாமர தர்மவர்த்தன, தேசிய மற்றும் சர்வதேச அளவில் அனுபவம் வாய்ந்த ஜூடோ வீரர் ஆவார். அவர் அண்மையில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டைவிட்டு புறப்பட்டு செல்ல உள்ள குறித்த அணிக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.