--> -->

பொத்துவிலில் தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கையளிப்பு

ஒக்டோபர் 26, 2021

கிழக்கு பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் மனிதவலு மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு புதிய வீடு பொத்துவில் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பாதுகாப்புப் படையின் தலைமையகம் 24வது பிரிவு, 242 பிரிகேட்டின் கீழ் உள்ள 25வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்களின் மனிதவளம் மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவம் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டிற்கான நிதியுதவி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புரவலரும் சமூக சேவையாளருமான திரு.அதுல ஜெயசங்கவினால் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற புதுமனை குடிபுகு விழாவில் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரி கலந்துகொண்டு வீட்டின் உரியாமையாளர், பொத்துவில் செங்கமுவத்தில் வசிக்கும் திரு பி. சன்முகத்திடம் கையளித்ததார். இந்த நிகழ்வில் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.