--> -->

முல்லைத்தீவில் நோயாளிகளுக்கு இராணுவத்தினரால் இரத்ததானம்

ஒக்டோபர் 29, 2021

முல்லைத்தீவில் கடமையாற்றும் படையினர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் இரத்ததான வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டியவின் பணிப்புரைக்கமைய, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த மாதிரிகளின் தேவையை பூர்த்தி செய்ய்யும் வகையில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இரத்ததானம் வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.