--> -->

50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 22, 2021

கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் நேற்று மாலை (நவம்பர், 21) இடம்பெற்ற 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட 50வது பங்களாதேஷ் படைவீரர்கள் தின விழா, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் எம்.டி. ஆரிபுல் இஸ்லாம் தலைமையில் இடம்பெற்றது.

ஆண்டு தோறும் நவம்பர் 21ம் திகதி கொண்டாடப்படும் பங்களாதேஷ் படைவீரர்கள் தினமானது, இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் பூர்த்தியாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரால் குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமாப்படைத் தளபதிகள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.