--> -->

புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

டிசம்பர் 05, 2021

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (டிசம்பர், 05) கொழும்பில் உள்ள முன்னாள் படைவீரர் சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது, ​​சார்ஜென்ட் அனுஷா ஜயதிலகவின் (ஓய்வு) கவிதைத் தொகுப்பின் முதற் பிரதி பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இலக்கியப் பணியில் ஈடுபட்டுள்ள ஜெனரல் குணரத்ன, வளர்ந்து வரும் இலக்கியப் பங்களிப்பாளர்களின் முக்கியத்துவத்தையும், தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவையாற்றிய போர்வீரர்களின் கதையை சமூகமயமாக்கும் அவர்களின் முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, இலங்கை விமானப்படையின் நலன்புரி சேவைகளுக்கான பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா மற்றும் முன்னாள் படைவீரர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை உள்ளடத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.