--> -->

நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 02, 2022

இலங்கைக்கான நைஜீரிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் அந்தோணி விக்டர் குஜோ,பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (பெப்ரவரி, o2) சந்தித்தார்.

இன்று சந்திப்பு இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நைஜீரிய பாதுகாப்பு படையினருக்கு இலங்கையின் பயிற்சி உதவிகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடினார்.

 மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் நைஜீரிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கொவிட்-19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

தற்போது இந்தியாவின் புதுடில்லி நகரில் வாசஸ்தலத்தை கொண்டுள்ள இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.