--> -->

போலந்து பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

மார்ச் 21, 2022

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்புச் செயலர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கேர்ணல் கிராப்ஸ்கி மற்றும் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.