--> -->

இந்திய கடற்படைக்கப்பல் நாட்டிற்கு வருகை

ஜூன் 18, 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் ரன்வீர்” கப்பல் மூன்று நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று ( ஜூன், 18) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

146 மீட்டர் நீளத்தைக் கொண்ட இக்கப்பல், 273 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.

எதிர் வரும் வியாழக்கிழமை (ஜூன்,20) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக்கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.