--> -->

புதிய கடற்படை பிரதம அதிகாரி நியமிப்பு

ஜூன் 22, 2022

ரியர் அட்மிரல் உப்புல் டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2022, ஜூன் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடற்படை பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ரியர் அட்மிரல் உப்புல் டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.