--> -->

தியத்தலாவை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படை பயிலுனர்கள்

ஜூலை 11, 2022

தியத்தலாவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியேறும் மரியாதை அணிவகுப்பு அண்மையில் விமானப்படை பிரதிப் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் எம்டி ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது 77 கெடட் அதிகாரிகள் மற்றும் 601 விமானப்படை வீரர்கள்  பயிற்சியை முடித்து வெளியேறினர்.

தியத்தலாவை பயிற்சிக்  கல்லூரியின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.எஸ்.என். பெர்னாண்டோ உட்பட, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படையின் ஏனைய பணியாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.