--> -->

கடத்தி வரப்பட்ட ரூபா. 9 மில்லியன் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

ஜூலை 29, 2022

மன்னார், பேசாலை குருசபாடு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வாலம்புரி சங்கு ஒன்றும்  கைப்பற்றப்பட்டது.

கடற்படை தகவல்களுக்கமைய இந்நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்களும் ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 9 மில்லியனுக்கும் அதிகமாகும்.

புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்  என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட தங்கம், சங்கு மற்றும் படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம்  சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கிறது.