--> -->

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி உறுப்பினர்கள் அதன் முன்னோக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஆகஸ்ட் 04, 2022

தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் (NAHTTF) கூட்டம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 03) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளரும் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலணியின் முன்னோக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அமெரிக்காவில் ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அதன் அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலிலிருந்து அடுக்கு 2 க்கு இலங்கை மேம்படுத்தப்படுவதற்காக அர்பணிப்பியுடன் செயல்பட்ட உறுப்பினர்களின் சேவையும் பாராட்டுக்கு உட்படுத்தப்பட்டது.