--> -->

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு

ஆகஸ்ட் 25, 2022

பாதுகாப்பு அமைச்சினது ஊழியர்களின் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில்தொழில்நுட்பப் பிரிவின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் திருமதி செனவிரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைமையில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு பொறியியலாளர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.