--> -->

மாலைதீவு பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

செப்டம்பர் 02, 2022

மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் இஸ்மாயில் நசீர் மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் ஹசன் அமீர் ஆகியோர் இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் அவர்களை இன்று (செப்டம்பர் 02) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த மாலைதீவு பாதுகாப்பு ஆலோசகர்களை ஜெனரல் குணரத்ன அன்புடன் வரவேற்றார்.

இச்சிநேகபூர்வ சந்திப்பின் போது, பிரியாவிடை பெற்றுச்செல்லும் மாலைதீவு பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் இஸ்மாயில் நசீர் தனது சேவைக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, விடைபெற்றுச்செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜெனரல் குணரத்ன பாராட்டியதுடன், இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த வழிவகுத்த அவரது சேவையையும் பாராட்டினார். நியாயம் பெற்று வரவுள்ள புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் பாதுகாப்பு செயலாளர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளருக்கும், விடைபெற்றுச்செல்லும் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.