--> -->

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான உதைபந்தாட்ட போட்டி

செப்டம்பர் 13, 2022

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இளைஞர் அணி மற்றும்  கட்டைக்காடு இளைஞர் அணிகளுக்கிடையில் சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்று அண்மையின் கட்டைக்காடு உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.    

இராணுவம் மற்றும் வடக்கு சிவில் விளையாட்டு சமூகத்துக்கிடையே  விளையாட்டுத்திறன், நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டி யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகள், படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந் நட்பு ரீதியிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியினால் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.