--> -->

இலங்கை விமானப்படை ஆயுர்வேத மருத்துவ நிலையம் திறந்து வைப்பு

செப்டம்பர் 13, 2022

இலங்கை விமானப்படையில் (SLAF) உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்துமுகமாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் கீழ் கொழும்பு குவன்புரவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் ஆயுர்வேத நிலையம் ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

ராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையுடன் இணைந்து இருவாரங்களுக்கொரு தடவை வியாழக்கிழமை நாட்களில் விமானப்படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை உறுப்பினர்களுக்கு இம்மருத்துவ நிலையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.