--> -->

வட மாகாண குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

செப்டம்பர் 22, 2022

பருத்தித்துறை துன்னாலையில் வசிக்கும் செல்வரத்தினம் ஜெயப்பிரதா என்பவரின் குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்துமத சம்பிரதாயங்களுக்கு அமைய இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு, மோதரா - மட்டக்குளிய லயன்ஸ் கழகத்தின் ஊடாக வெளிநாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு இலங்கை இராணுவம் தனது மனிதவளத்தை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

எழுமையான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது. யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தரவினால் தேவையுடைய குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொதியும் குடும்பத்தில் உள்ளவர்கள் உட்பட பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசியப் பாடசாலைப் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.

மோதேர - மட்டக்குளிய லயன்ஸ் கழக உறுப்பினர்கள். கரவெட்டி உதவி பிரதேச செயலாளர். 551 ஆவது 552 ஆவது மற்றும் 553 ஆவது படையணிகளின் படைத் தளபதிகள். கட்டளை அதிகாரிகள். அந்தந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள். இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.