--> -->

கொழும்பில் பல இடங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி வெளிடப்பட்டுள்ளது

செப்டம்பர் 24, 2022

கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான சட்டங்களை நடைமுறை படுத்துவதற்கான தகுதிகான் அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் செயற்படுவார்.

இதற்கமைய அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு :-

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் பாராளுமன்ற வளாகம், உச்ச நீதிமன்ற வளாகம்,உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் தலைமையகங்கள், அகுரேகொட பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவ தலைமையகம், பிரதமரின்  அலுவலகம், அலரி மாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்பைடை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம்  ஆகிய பிரதேசங்களே இவ்வாறு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.