--> -->

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 07, 2022

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பச் அவர்கள் இன்று (அக். 07) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இடம் பெற்றது.

பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகை தந்த நெதர்லாந்து தூதுவரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றதுடன் தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்த தூதுவர் போனி ஹார்பச், இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.