--> -->

யார்ப்பணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் கரப்பந்து விளையாட்டுப் போட்டி

ஒக்டோபர் 22, 2022

55 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 552 படையணியின் 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் படை வீரர்களினால் , யாழ் குடாநாட்டில் சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்தும் வகையில் யாழ்பானத்திலுள்ள 7 கிராம சேவை பிரிவுகளுக்குற்பட்ட கரப்பந்து விளையாட்டு வீரர்களுக்கிடையில் கரப்பந்து விளையாட்டுப் சுற்றுப்போட்டியொன்றை அண்மையில் (அக்டோபர் 15-16) ஏற்பாட்டு நடத்தப்பட்டது.

552 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்களின் தலைமையில் இரண்டு நாட்களும் இயக்கச்சியில் உள்ள 1 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவு முகாமில் உள்ள கரப்பந்து மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதிப் போட்டியில் கோவில்வயல் அணியும் இயக்கச்சி அணியும் போட்டியிட்டதில் கோவில்வயல் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக 1 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ரோஹன திலகரத்ன கலந்து கொண்டார். பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட இராணுவ உட்பட பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.