--> -->

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

நவம்பர் 02, 2022

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு இன்று (நவம்பர் 02) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.