--> -->

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் நட்பு ரீதியிலான வலைப்பந்தாட்ட போட்டி

நவம்பர் 08, 2022

பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளூர் இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இராணுவம் அண்மையில் யாழ்ப்பாணம் மிருசவில்லில் நட்பு ரீதியிலான வலைப்பந்தாட்ட போட்டியை ஏற்பாடு செய்தது.

இராணுவத்தின் 52வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியை பார்வையிட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கலந்துகொண்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.