--> -->
ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக குறைந்த வருமானங்ககளைப் பெரும் குடும்பங்களிலிருந்து 34,818 பேர் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Tamil
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,041 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பைப் பேணிய 1036 பேரும் அடங்குவதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள மூன்று பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை வலுப்படுத்தும் வகையில், அவுஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு 04 பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களையும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமான 1999 ஐ அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3397 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இலங்கை படையினர் அண்மையில் ‘எக்ஸ்-ஸ்டீல் ஸ்ரோம் - 2020’ எனும் ஐந்து நாட்களை கொண்ட நேருக்கு நேர் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியில் பங்கேற்றது,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 110 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,354 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 74 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,244 பதிவாகியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை கட்டாயப்படுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் தொடர்பாக நேற்று நள்ளிரவு (ஒக்.14) முதல் அமுலுக்கு வரும்வகையில் சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.