--> -->
ஹுவாவி டெக்னோலஜிஸ் லங்கா தனியார் நிறுவனம் வீடியோ தொழிநுட்ப மாநாட்டு முறை ஒன்றினை மேற்கொள்வதற்கான உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
Tamil
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரினால் சட்டவிரோதமாக பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு ‘சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச் சொத்துக்கள் விசாரணை பிரிவு’ எனும் பெயரரில் விஷேட பிரிவொன்று, கொழும்பு 1, சத்தம் வீதியில் அமைந்திருக்கும் சென்றல் பொயின்ட் எனும் இடத்தில் வெகு விரைவில் நிறுவப்படவுள்ளது.
பாரிய போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான சந்தேகநபரை 1 கிராம் மற்றும் 170 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொடை பொலிஸார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெரும்பாலான கடற்படை வீரர்கள் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர். இதற்கேற்ப வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வீரர்களில் மூவர் மாத்திரமே தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,824 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ சீருடைகள், ஐந்து கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கி ரவைகள், நான்கு வெற்று மெகசின்கள், சட்ட விரோதமான இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
ராஜாங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 139 பேருக்கான பிசிஆர் பரிசோதனையில் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
அனுமதிக்கப்படாத தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டத்தை இன்று (ஜூலை,17) முதல் அமுல்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை, கொழும்பு மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் 53 கையடக்க தொலைபேசிகள் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் பெட்டரிகள் மற்றும் சிம் காட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிடச் சென்ற குடும்ப உறுப்பினர்கள் 114 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு தொற்று ஏற்பட வில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1,642 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையிலான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு, பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.
தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,இதற்கு தேவையான அனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.