--> -->

பாதுகாப்பு செய்திகள்

செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெலிசர கடற்படை வைத்தியசாலை இன்று மீண்டும் ஆரம்பம்

வெலிசர கடற்படை வைத்தியசாலை 77 நாட்களுக்கு பின்னர் வெளிநோயாளர்கள் சிகிச்சைகளுக்காக இன்று (ஜூலை 10) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.  






செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடல்சார் முதல் ஆவணத் தொகுதி கடற்படையினால் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கடற்பரப்பில் காணப்படும் தகவல்கள் அடங்கிய கடல்சார் முதல் ஆவணத் தொகுதி சற்று முன் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

வெல்லவாய பிரதேசத்தில் யானைகளின் ஊடுருவலைத் தடுக்க 100,000 எலுமிச்சம் கன்றுகள் சிவில் பாதுகாப்பு படையினரால் வழங்கி வைப்பு

யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் ஹந்தபானகல பிரதேசத்தில் நடுகை செய்வதற்காக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு 100,000 எலுமிச்சை கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்டது. மனித- யானை முரண்பாடுகளை தவிர்க்கும் புதிய முயற்சியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடுகை செய்வதற்கென சிவில் பாதுகாப்பு படையினரால் இந்தக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேர்தல் வன்முறைகளைக் கையால விசேட நடவடிக்கை மையம்

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையத்தை நிறுவியுள்ளது.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த 24 மணித்தியாலங்களில்1,885 பேருக்கு பொலிஸார் வலை விரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,855 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கொத்மலை ஓயாவில் வெடிமருந்து மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நாவலப்பிட்டிய கொத்மலை ஓயாவுக்கு அருகில் வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு அதிகாரி கைது

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவை சேர்ந்த மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை   குற்றவியல் புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூலை 07) கைது செய்துள்ளது.

 



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் பொலிஸாரிடம் சரண்

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கன்கனம்லாகே சமன் வசந்த குமார இன்று காலை கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை ஆழ்கடல் நோக்கி வழிநடத்திய கடற்படை

கல்முனை நிந்தவூர் கடற்பரப்பில் கரையொதுங்கிய திமிங்கில சுறா ஒன்றினை மீண்டும் ஆழ்கடலுக்குள் வழிநடத்தும் முயற்சிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.



செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

முல்லேரியா பிரதேசத்தில் 56.46 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

விநியோகத்திற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லேரியா களனி நதி வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

இட்டுகம' நிதியத்தின் இருப்பு ரூ.1.4 பில்லியனை எட்டியது

'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனை எட்டியுள்ளது.


செய்திகளைப் பாதுகாக்கவும் | செய்திகளைப் பாதுகாக்கவும்

கப்பல் கழிவுகள் தொடர்பில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நாளை முதல் கண்காணிப்பு

இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் கப்பல் கழிவுகள் தொடர்பில் நாளை முதல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.