பாதுகாப்பு செய்திகள்
இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய அனர்த்த மீட்பு குழு படைவீரர்களின் செயல் விளக்க காட்சி
இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் 40 நாட்களைக் கொண்ட அனர்த்த முகாமை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான அடிப்படை பாடநெறியினை நிறைவு செய்த படைவீரர்களினால் அனர்த்தங்களின் போதான மீட்பு பணிகள் தொடர்பான செயல் விளக்க காட்சி அளிக்கப்பட்டது.
12,095 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 400 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,171 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு
இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பல பகுதிகள் நாளை முதல் விடுவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பொரள்ளை, வெல்லம்பிட்டிய, கொழும்பு கோட்டை, கொம்பனித் தெரு ஆகிய பொலிஸ் பிரதேசங்கள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன
மன்னார் எருக்கலம்பிட்டி கரையோரத்தில் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 710கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
10,514 பீசிஆர் பரிசோதனைகள் நோற்று முன்னெடுப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 496 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டினல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,771 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
'ஹூஸ்ம தென துரு' தேசிய மரநடுகை திட்டம் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் பத்தரமுல்லையில் அங்குரார்ப்பணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர வில் இராணுவத்தினர் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதையின் இரு மருங்கிலும் சந்தன மரக்கன்றுகளை நடுகை செய்து 'ஹூஸ்ம தென துரு' தேசிய மரநடுகை திட்டத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 439 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 327 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 18,841ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக கடமை ஏற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்புச் செயலாளராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.