பாதுகாப்பு செய்திகள்
அரச ஆதரவுடன் மஞ்சள் பயிர்ச்செய்கை திட்டம் இராணுவத்தினரால் ஆரம்பிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள உலர்ந்த மஞ்சளுக்கான அதிகரித்த கேள்வியினை ஈடுசெய்யும் வகையில் இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை திணைக்களத்தினால் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள இராணுவத்தினரின் பயிர்ச்செய்கை காணியில் மஞ்சள் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திரு ரவீநாத ஆரியசின்ஹா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்கா வாஷிங்டன் டீசி நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியது
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
வெற்றிலைக்கேணி கடற் பிரதேசத்தில் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 63 மில்லியன் ரூபா பெறுமதியான 213 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொது இடங்களை தொற்று நீக்கம் செய்யும் பணிகள் படையினரால் முன்னெடுப்பு
முல்லைத்தீவில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பொதுவிடங்களில் ஆபத்தினை குறைக்கும் வகையில் 64 வது படைப்பிரிவின் படை வீரர்களினால் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு தபால் மூலம் மருந்துகளைஅனுப்பி வைக்கும் திட்டம் இன்று ஆரம்பம் : சுகாதார அமைச்சு
நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் வழக்கமாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை இன்று முதல் அமலாகும் வரையில் தபால் மூலம் விநியோகிக்கும் பொறிமுறையை தபால் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய விமானப் படைத்தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (நவம்பர், 04) சந்தித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளை ம
இலகுபடுத்துவதற்காக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
திருகோணமலைக் கடலில் மூழ்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர்
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் கடலுக்கடியில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கடற்படையினரால் நேற்று (நவம்பர்,02) முன்னெடுக்கப்பட்டது.
அட்மிரல் பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வு) பியால் டி சில்வா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவை இன்று (நவம்பர், 03) சந்தித்தார்.
கரையொதுங்கிய திமிங்கலங்கள் கடற்படை தலைமையிலான கூட்டு செயல்பாட்டில் மீண்டும் ஆழ்கடலுக்குள்
கடலோர பாதுகாப்புப்படை உயிர்காப்பு பிரிவு, பொலீஸ் உயிர்காப்பு பிரிவு, தன்னார்வ உயிர் காப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு சேர்க்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பல பொலிஸ் பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்
கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களும் கலிகமுவ பிரதேச சபை பிரதேசமும் குருணாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல பொலிஸ் பிரதேசமும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு டிஜிட்டல் உடல் வெப்பமானிகள்
மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி வண. ஈத்தல்வெட்டுனவெவ குணதிலக்க தேரரினால் வன்னி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு10 டிஜிட்டல் உடல் வெப்பமானிகளை பெற்றுக் கொடுக்க அனுசரனை வழங்கினார்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப்படை தளபதியின் பங்களிப்பு அளப்பரியது - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் மூன்று தசாப்த கால நீண்ட பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் இலங்கை விமானப்படை பல வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸின் பங்களிப்பு அளப்பரியது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.