--> -->
மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த எஸ் ஆர் கிவ் ரோபாட்டிக்ஸ் பொறியியலாளர்கள் குழுவினர் பொது இடங்களில் புற ஊதாகதிர்வீச்சை பயன்படுத்தி கிருமி தொற்று நீக்கம் செய்யும் ரோபோ ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
Tamil
பாதுகாப்பு அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தன இன்று (மே 27) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தேவையுடைய மக்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கவென வரையறுக்கப்பட்ட ஹெய்லீஸ் நுகர்வோர் உற்பத்தி பொருட்கள் நிறுவனத்தினால் ரூ. 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
வரையறுக்கப்பட்ட ஏஐஏ காப்புறுதி நிறுவனத்தின் கேகாலை கிளையினால் ரூ. 500,000 , இட்டுக்கம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியித்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு வினியோகிக்கவென போரில்...
ஆனந்தா கல்லூரியின் 75 - 80களில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என்பன அன்பளிப்பு செய்யப்பட்டன.
குருணாகலிலுள்ள தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் ஜா எலயிலுள்ள எஸ் கே டி உற்பத்தி நிறுவங்களினால் 2,000 க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் மற்றும் 250 சேஜிகள் ஓவரோல் கிட் என்பவற்றை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தனவிடம் நேற்று (23) கையளித்துள்ளனர்.
வரையறுக்கப்பட்ட சுவதேசி இன்டஸ்ட்ரீஸ் வேர்க்ஸ் நிறுவனத்தினால் ஒரு தொகை சவர்க்காரம் மற்றும் கிருமி நீக்கும் திரவம் என்பன பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
'அபி வெனுவென் அபி- 67வது குழு' ஐச் சேர்ந்த கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக 400,000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான நாட்டில் முதற்தர பாதுகாப்பு சேவை வழங்கும் வரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்ஷக லங்கா நிறுவனத்தினால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ. 3 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக செயலாற்ற உலகின் முதற்தர தகவல் தொடர்பாடல் நிறுவனமான ஹுவாவி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சிற்கு டிஜிட்டல் கருவிகளை வழங்கியது.
எல்ஓஎல்சி நிறுவனம் மனுஷத் தெரனவுடன் இணைந்து 75 கிருமி நீக்கும் உபகரணங்கள், 06முகக் கவசங்கள் மற்றும் 06 தொற்று நீக்கிகள் கலன்கள் என்பவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை பொருட்கள் இம்மாதம் 10ம் திகதி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளித்தது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் (அன்றாடம் தொழில் புரிகின்ற) குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் 85 உலர் உணவு பொதிகளை நன்கொடையாளர்கள் வழங்கி வைத்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வரியமக்களுக்கு இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி, திருமதி சித்ராணி குணரத்ன அமைச்சில் பணிபுரியும் சிற்றூழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கம் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவிசாவளை மிடாஸ் சேப்டி குழுவின் ப்ரைம் பொலிமர் பிரிவினால் ஒரு தொகை கையுறைகள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் கையளிக்கப்பட்டது.