செய்திகள்

கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்திய விமானப்படை பதவிநிலை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 28ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு நாட்டு விமானப்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் 10வது தடவையாக இடம்பெறுகின்றது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்காக விமானப்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மையமாகக் கொண்டது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நான்கு கடற்படை வீரர்களுக்கு சர்வதேச கடல்சார் நிறுவனத்தினால் அங்கீகாரமளிப்பு

நான்கு கடற்படை வீரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான கடலில் சாகசம் மிகுந்த துணிச்சலுக்கான ஐஎம்ஓ விருது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. கடற்படை வீரர்களின் துணிச்சலைக் கருத்தில் கொண்டு சர்வதேச கடல்சார் அமைப்பான ஐஎம்ஓ வினால் இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும் – பாதுகாப்புச் செயலாளர்

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

Tamil


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடலோரப் பாதுகாப்பு படை பணிப்பாளருடன் ஜய்கா நிறுவன தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் (ஜய்கா) தலைவர் யமடா டெட்சுகா மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் (டிசம்பர் 14) சமுத்ர ரக்ஷா கப்பலில் இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்

“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை மற்றும் ஜப்பான் எதிர்பார்ப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகோஷி ஹிடேகி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,15) சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குதே எமது இலக்கு - பாதுகாப்புச் செயலாளர்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கேரிக்கை விடுத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த ஆய்வு கருத்தரங்கு பாதுகாப்பு செயலாளரினால் அங்குரார்ப்பணம்

பத்தரமுல்லவில் அமைந்துள்ள வாேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வு கருத்தரங்கு - 2021 இல் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பண்டிகை காலத்துக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தெரிவிப்பு…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுகின்றனர் -பாதுகாப்பு செயலாளர்

போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த  முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 10) தெரிவித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புது டில்லி மற்றும் இலங்கைக்கான  செனகல் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று (டிசம்பர்,10) சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு…

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச் சுட்டிக்காட்டினார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

இரங்கல் செய்தி

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் துயர மரணத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் மற்றும் இலங்கை முப்படையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை (டிசம்பர் 08, 2021) தமிழ்நாடு குன்னூரில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறார்கள்.



கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் சபை கூட்டம்

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்றையதினம் (டிசம்பர், 07) பிற்பகல், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது.  


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்

புதிய இராணுவத பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.  2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த செய்தி | செய்திகளைப் பாதுகாக்கவும்