--> -->
Tamil
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (நவம்பர் 18, 2019) அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளி மகா சேயவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய அவர்கள் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆனமடுவ, கறுவலகஸ்வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச தேரவாத கற்கை நிலையத்தில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றையதினம் ஜனாதிபதி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினரால் இவ்வருடம் (2019) க.பொ.தா. சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கிளிநொச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச உதவிக் கருத்தரங்கில் அதிகளவான மாணவர்கள் கலந்துகொண்டு நன்மையடைந்துள்ளனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, அவசரகால நிலைமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான முக்கிய செய்திகள் பொதுமக்களை விரைவாக சென்றடையச்செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சு ‘MOD ALERTS' எனும் புதிய குறுந்தகவல் சேவையினை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (நவம்பர், 10) கலந்து சிறப்பித்தார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர, பத்தரமுல்லை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை இராணுவத் தலைமையகத்தின் அங்குரார்ப்பன மற்றும் உத்தியோகபூர்வ கையளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (நவம்பர், 8) இடம்பெற்றது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதி (இராணுவ பாதுகாப்பு கட்டிடத்தொகுதி) நாளை (நவம்பர் 08) திறக்கப்படவுள்ளது.
அண்மையில் (ஒக்டோபர் 18) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் தெஹிவளை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு விழிப்பூட்டல் நிகழ்வொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
ஐ. நா. பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் திட்டத்திற்கு அமைய மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நேற்றயதினம் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், அதிமேதகு திரு. எம் அஷ்ரப் ஹைடரி அவர்கள் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (நவம்பர், 05) சந்தித்துள்ளார்.
போலந்து குடியரசு பிரதமர் அலுவலக சர்வதேச ,மத்தியஸ்தரும் விஷேட சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் ஆலோசகருமான திரு.
பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகள் பல பாதுகாப்பு அமைச்சில் (நவம்பர்,05) இன்று இடம்பெற்ற வைபவத்தின் போது இலங்கை இராணுவத்தினருக்கு கையளிக்கப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதன் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு புதிய ரோபோக்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தியுள்ளது.
விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று, வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கான பாதுகாப்பு நிபுணர், திரு. மானுவல் அமரில்லா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (நவம்பர், 01) சந்தித்தார்.
இலங்கை விமானப்படையினர் வன பாதுகாப்பு திணைக்களம், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அம்பாறை லஹுகள வனப்பகுதியில் வான் வழியாக விதை குண்டுகளை இடும் அதன் இரண்டாவது நிகழ்வினை வாரத்தின் முதற்பகுதியில் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் வடக்கு பிராதியத்தைச் சேர்ந்த அனகவீனமுர்ற பொதுமக்களுக்கு செயற்கை கால்களைப் பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டம் அண்மையில் (ஒக்டோபர்,30 ) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவில் உள்ள 'சம்மி' எனும் மோப்பநாய் மற்றும் அதனைக் கையாளும் 5வது களமுனை பொறியியிலாளர் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் பிஜி நிஷாந்த பண்டார ஆகியோர் வாஷிங்டனை தளமாகக்கொண்ட மார்ஷல் லெகஸி நிறுவனத்தினால் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியினருக்கு வாஷிங்டன் பயார்மௌன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 'கிளியரிங் தி பாத்' எனும் நிகழ்வின்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பாடசாலை மாணவர்களுக்கா நீரில் மூழ்குவதைத் தடுப்பது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வு திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான KDU + பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.