செய்திகள்
Tamil
Tamil
தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
போர்வீரர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு நிவாரணம் அளிக்க அமைச்சரவை அங்கீகாரம்
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரினை சார்ந்து வாழ்பவர்களுக்கு படைவீரர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று தெரிவித்தார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் நாடு திரும்பினார்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சீன நாட்டின் கவுன்சிலர் கவுன்சிலர் பாதுகாப்பு அமைச்சருமான வெய் பெங் இன்று காலை (ஏப்ரல் 29) நாடு திரும்பினார்.
இலங்கை - சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
சீன நாட்டின் கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இலங்கை மற்றும் மக்கள் சீனக் குடியரசு இடையே இருதரப்பு கலந்துரையாடல் கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் இன்று காலை (ஏப்ரல் 28) நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர் சீன பாதுகாப்பு அமைச்சரை வரவேற்றார்
சீன தேசத்து கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீ ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் ( ஏப்ரல், 27) இலங்கையை வந்தடைந்தார்.
போதைப்பொருள் கடத்தல் வளையம் முடக்கம் - பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு போன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க புலனாய்வுத்துறையை மறுசீரமைத்துள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று மாலை (ஏப்ரல், 20) தெரிவித்தார்.
போர் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் புத்தாண்டு
“சுபீட்சத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேசமயம், திறமையாக செயல்படுவதற்கும், அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டில் எமது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கும் நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகளை சம்பிரதாய பூர்வமாக மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமானதாக சிங்கள, தமிழ் புத்தாண்டு அமையட்டும் என பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சீன தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மலே வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கான விஜயம் ஒன்றினை இன்று (ஏப்ரல், 09) மேற்கொண்டனர்.
ரணவிரு சேவா அதிகாரசபைக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
போர் வீரர்களுக்கு பாதுகாப்பு போர் வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார். ரணவிரு சேவா அதிகாரசபைக்கு இன்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ரணவிரு சேவா அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (08) கூடியது.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கொழும்பு மலேய் வீதியிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு இன்று (ஏப்ரல் 05) விஜயம் செய்தார்.
சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று
இலங்கை வரலாற்று ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயமாக, சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தினுள் புதையல் பொருட்கள் மற்றும் புனித நினைவுச் சின்னங்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் இன்று (மார்ச் 28) புனித நகரமான அனுராதபுரத்தில் தூபி அமையப்பெற்றுள்ள வளாகத்தில் மகா சங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
ரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு, யூரி மேட்டரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) இன்று (மார்ச் 26) சந்தித்தார்.
சந்தஹிரு சேய தூபியின் நட்சத்திரத்தில் வைப்பதற்காக புனித புதையல் பொருட்கள் கையளிப்பு
புனித சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் வைப்புச் செய்வதற்காக டிபி ஜயசிங்க குரூப் ஒப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டிபி ஜயசிங்கவினால் ஒரு தொகுதி புதையல் பொருட்கள் இன்று (மார்ச், 26) கையளிக்கப்பட்டன.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களுக்கான விரிவுரை
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கையின் தேசிய பாதுகாப்பில் துறைமுக நகரத்தின் செல்வாக்கு' எனும் தலைப்பிலான விரிவுரை பத்தரமுல்லையில் இன்றைய தினம் (மார்ச் 26) இடம்பெற்றது.
Tamil
சந்தஹிரு சேய தூபிக்கான புதையல் பொருட்களை அன்பளிப்பு செய்ய மேலும் ஆறு நாட்கள் அவகாசம்
அனுராதபுரம், சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பெரும் தொகையான புதையல் பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் இவற்றை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tamil
அபி வெனுவென் அபி திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு வீடுகள் கையளிப்பு
தாய்நாட்டுக்காக தம்மை அர்பணித்த படைவீரர்களின் சொந்த வீடு எனும் கனவை நானவாக்கும் அபி வெனுவென் அபி திட்டத்தின் மூலம் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு படைவீரர்களின் வீடுகளுக்கு நிதி மற்றும் ஆளணி உதவிகளை வழங்கி அவர்களின் வீடுகளை முழுமை அடையச் செய்து அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (மார்ச், 20) மாத்தறை, வெவஹமன்துவயில் இடம்பெற்றது.
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக புனித பொருட்கள் அன்பளிப்பு
சந்தஹிரு சேய தூபியில் வைப்பதற்காக ஒரு தொகை பெறுமதிவாய்ந்த புனிதப் பொருட்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் (ஓய்வு) இன்று (மார்ச், 19) கையளிக்கப்பட்டது.
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு 2.65 மில்லியன் ரூபா நன்கொடை
'தீகவாபிய அருண' நம்பிக்கை நிதியத்திற்கு நேற்று (மார்ச் 18) வைத்தியர் பிரியங்கி அமரபந்துவினால் 2.65 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.