செய்திகள்
சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்
தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர்.
ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, செவ்வாய்கிழமை (மே 10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை மீண்டும் நியமித்துள்ளார்.
ஊடக அறிக்கை
கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் பூங்கா அன்பளிப்பு
யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கோப்பாய் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் அன்பளிப்பாக வழங்கிய சிவில்-இராணுவ ஒத்துழைப்பு (CIMIC) பூங்கா நேற்று (மே 8) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.
சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை கடற்படையினரால் பைப்பற்று
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோ கிராம் போதைப் பொருட்கள் இலங்கை கடற்படையினரால் (SLN) தெற்கு பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடலோர காவல்படை JICA மற்றும் JCG உடன் பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) இடையே, பேரிடர் தணிப்பு மற்றும் கடல் சூழல் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு மேம்பட்ட எண்ணெய் கசிவு சம்பவ மேலாண்மை பயிற்சி திட்டத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல் பதிவு சமீபத்தில் இலங்கை கடலோர காவல்படை நிலையம் வருணா வில் கைச்சாத்திடப்பட்டது.
இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாணவ படையணியினருக்கு தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 50 யாழ்ப்பாண பாடசாலை மாணவ படையணியினருக்கு தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் தல்செவன விடுமுறை விடுதியில் நடைபெற்றது.
ஒரு தொகை சட்டவிரோத சுறா மீன் பாகங்கள் கடலோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்று
இலங்கை கடலோர காவல்படையினர், நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட சுறா மீன் பாகங்களுடன் ஆறு மீனவர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வத்தளையில் மூன்று கடைகளில் ஏற்பட்ட தீயை அணைக்க இலங்கை கடற்படை உதவி
வத்தளை, எலகந்தவில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மூன்று ஜவுளிக் கடைகளில் இன்று (மே 06) காலை ஏற்பட்ட தீயை இலங்கை கடற்படையினர் அணைத்துள்ளனர்.
இலங்கை கடலோர காவல்படையினர் கடல் ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்தனர்
இலங்கை கடலோரக் காவல்படையினரால் ஒரு தொகை கடலாமை குஞ்சுகள் அண்மையில் காடலில் விடுவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பட்டிருந்த இரத்தத்தை வழங்கவென மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தினால் இரத்ததான முகாமொன்று நேற்றைய தினம் (04) நடாத்தப்பட்டது.
மற்றுமொரு முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணம்
யாழ்ப்பாண குடாநாட்டில் மிகுந்த கஷ்டத்திட்கு மத்தியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவருக்காக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதட்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் பருத்தித்துறை, புலோலியில் வசிக்கும் முன்னாள் போராளிக்கான உத்தேச வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளதாக இலங்கை இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (மே 04) நண்பகல் 1200 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
Tamil
Tamil
மே தின வாழ்த்துச் செய்தி
உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.
Tamil
Tamil
Tamil
Tamil
திவுலபிட்டிய வைத்தியசாலை வார்ட் இராணுவத்தினரால் புனரமைப்பு
திவுலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பழுதடைந்திருந்த கோவிட் 19 வார்ட்டின் புனரமைப்புப் பணிகளை இலங்கை இராணுவம் நிறைவு செய்து, வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்தது.
இலங்கையில் உள்ள ‘அவுஸ்திரேலிய இல்லத்தில்’ 107வது (அன்சக் போர்வீரர் நினைவேந்தல் நடைபெற்றது
ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ராணுவப் படைகளின் (அன்சக்) 107வது ஆண்டு நினைவு தினம் நேற்று (ஏப்ரல் 25) ‘ஆஸ்திரேலியா இல்லத்தில்’ நடைபெற்றது.
கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 நடைபெற்றது
இலங்கை கடற்படை லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2022 திருகோணமலையில் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற்றது.





















