பாதுகாப்பு செய்திகள்
இராணுவ சேவா வனிதா பிரிவு தனக்கென முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஜயவர்தனபுரயிலுள்ள, இராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவா வனிதா அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (டிச. 15 ) நடைபெற்றது.
இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் கந்தளாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இலகரக பயிற்சி விமானம் கந்தளாய், சூரியபுர பிரதேசத்திலுள்ள வயல் காணியில் இன்று (15) விழுந்து விபத்துக்குள்ளானது.
படை வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான நன்கொடை நிதியினை ரணவிரு சேவா அதிகாரசபை பெற்றுக்கொண்டது
ரணவிரு சேவா அதிகார சபைக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட உளர்ந்த மஞ்சள் படையினரால் கைப்பற்றப்பட்டது
மன்னார் பள்ளிமுனை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1560 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மன்னாரை தளமாகக் கொண்டுள்ள 54 ஆவது படைப்பிரிவின் படைவீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்ன சிப்பிகுளம் பிரதேசத்தில் இராணுவத்தினரால் 300 மரக்கன்றுகள் நடுகை
சின்ன சிப்பிகுளம் பகுதியில் இராணுவத்தின் 213 ஆவது பிரிகேட் படையினரால் சுமார் 300ற்கு மேற்பட்ட வேம்பு, நாகை, மா ஆகிய மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
தேவையுடைய குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணம்
இலங்கை இராணுவம் சீகிரிய, கிம்பிஸ்ஸ பிரதேசத்தில் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடொன்றை நிர்மாணித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,260 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 538 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,612 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 14,336 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை கப்பல்கள் காலி முக திடலில் காட்சிக்கு
‘இது உங்கள் கடற்படை’ மற்றும் ‘உங்கள் கடற்படையை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ், கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொண்டு இலங்கை கடற்படையின் மூலதனக் கப்பல்கள் காலிமுகத்திடல் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐநா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட உள்ள ஐந்தாவது படைக்குழுவின் 2வது குழுவினர் இன்று பயணம்
தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் 5வது படைக் குழுவில் இணைந்து கொள்ளவுள்ள இலங்கை விமானப்படையின் 2வது குழுவினர் நாட்டிலிருந்து இன்று பயணமானார்கள்.
இலங்கை விமானப்படை கதிரியக்க உபகரண தொகுதியை பெற்றுக்கொண்டது
சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி அமைச்சர் கெளரவ . துமிந்த திசானாயக்க விஷேட கதிரியக்க பொருள் கண்டறிதல் மற்றும் கதிரியக்க அளவீட்டு கருவி தொகுதி ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கி வைத்தார்.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,257 ஆக உயர்வு
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் 100 மிமீ அளவிலான மழைவீழ்ச்சி கிடைக் பெறும் - வளிமண்டலவியல் திணைக்களம்
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
























