--> -->
Tamil
பாதுகாப்பு அமைச்சின் எழுத்துமூல அனுமதிப்பத்திரமின்றி தன்வசம் வைத்திருக்கும் அனைத்துவிதமான சட்டவிரோத ஆயுதங்களையும் அரசிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றன. அவை ஒன்றாக இருந்த போதிலும் ஒன்றுடன் ஒன்று வெளிப்படையாக தென்படுவதில்லை.
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக 2022.11.15 ஆம் திகதி முதல் 2022.12.31 ஆம் திகதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை வெளிநாடுகளில் உள்ள முப்படை வீரர்களும் பயன்படுத்தலாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக்கட்டா’ என;று அழைக்கப்படும் விக்கிரமரத்ன நந்துன் சிந்தக துபாய் பொலிஸாரால் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விடுவிக்கப்பட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆவணங்கள் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என சில அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பிரசுறிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் எண். 01 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகள் 2021 ஆம் ஆண்டில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர். இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2022 ஜூலை 19 வெளியிடப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பான (TIP) அறிக்கை 2022இன் பிரகாரம் இலங்கையை அடுக்கு 2 ற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.