--> -->

நீரில் மூழ்கிய நபர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டார்

ஏப்ரல் 19, 2020

பேலியகொடை, புதிய களனி பாலத்துக்கு அண்மித்த களனி ஆற்றில் மூழ்கிய ஒருவரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளார். இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த நபர் காப்பாற்றப்பட்டார்.

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்த படையினர் விரைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.