--> -->

இதுவரை 21,000 பீ சீ ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

மே 01, 2020

இது வரையில்  சுமார் 21000 பேருக்கு  பீ சீ ஆர்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூன்று வீதமானவர்களுக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவி தெரிவித்துள்ளது.

 ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலில் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகின் அனைத்து நாடுகளைப் பார்க்கிலும் முன்னிற்பதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடற்படையில் 997 பேர்  பீ சீ ஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 159பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் 80வீதமானவர்களிடம் எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.