--> -->

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்கள் கைது

ஜூன் 25, 2020

இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ்  ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமன சந்தேகநபர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

குறித்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சுமார் 7.3 கிலோ கிராமிற்கு அதிகமான ஹெரோயின், 284 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 835 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இதேவேளை, 3 கைத்துப்பாக்கிகள், 23 ரிபீடேர்ஸ் மற்றும் 21 குறுந்தூர துப்பாக்கிகள் உட்பட ஒரு தொகை சட்டவிரோத ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

மேலும் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது  சுமார் 379,700 லீட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானம் உட்பட 7,150 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

இதேவேளை, நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சுமார்  6,750 சந்தேகநபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர், அத்துடன் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய  சுமார் 12,000 க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.